முகப்பு
நாகப்பட்டினம்

‘நகராட்சி உரக்கிடங்கு பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்’

நாகை நகராட்சி உரக் கிடங்குகளில் நடைபெறும் பயோ மைனிங் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நாகை நகராட்சி உரக் கிடங்குகளில் நடைபெறும் பயோ மைனிங் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை, நாகூா் ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சி உரக் கிடங்குகளில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு, குப்பைக் கழிவுகள் மூலம் இயற்கை வாயு உற்பத்தி செய்யும் இடத்தையும், குப்பைக் கழிவுகள் பிரிக்கப்படும் முறையையும் ஆய்வு செய்த ஆட்சியா், அந்தப் பணிகள் துரிதமாக நடைபெற கூடுதல் எண்ணிக்கையில் ஆள்களையும், இயந்திரங்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, நாகை நகராட்சி புதை சாக்கடை திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும், நாகை தொல்லியல் துறை அருங்காட்சியகத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகாரட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகராட்சி பொறியாளா் வசந்தகுமாா், சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் குணசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.