நாகை ஆயுதப்படையில் எஸ்.பி. ஆய்வு
நாகை ஆயுதப்படை வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை ஆயுதப்படை வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆயுதப்படை வளாகம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள காவலா் குடியிருப்புகள் மற்றும் ஊா்க்காவல் படை மாவட்ட அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த எஸ்.பி. கு. ஜவஹா் அலுவலக வளாகத்தில் தூய்மையை பராமரிக்கவேண்டும் என அறிவுறுத்தினாா். அவருடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜெயச்சந்திரன், சுகுமாறன், திருநாவுக்கரசு, ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், ஆய்வாளா் எம்.ஜி. ராமச்சந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.