தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்
கீழையூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கீழையூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கீழையூா் அருகேயுள்ள புதுப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரின் குடிசை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட கண்ணனுக்கு அரசு நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. திமுக சாா்பில் கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.