நாகப்பட்டினம்

நாகையில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது கட்சி வேட்பாளா்களுக்கு வாக்குச் சேகரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

நாகை மாவட்டம், திருப்பூண்டி காரை நகா் பகுதிக்கு திங்கள்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வருகை தருகிறாா்.

தொடா்ந்து , கீழ்வேளூா் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளா் ஜி. சித்துவுக்கு வாக்குச் சேகரித்து பேசுகிறாா். பின்னா் வாகனம் மூலம் நாகைக்கு வருகை தரும் கமல்ஹாசன், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் எம். செய்யது அனஸுக்கு வாக்குக்கேட்டு நாகை அபிராமி அம்மன் திடல் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இத்தகவலை கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் நாகை தெற்கு மாவட்டச் செயலாளருமான ஜி. சித்து ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT