நாகப்பட்டினம்

திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

DIN

திருவெண்காடு அருகே திருநகரி கல்யாண ரெங்கநாதா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி, கல்யாண ரெங்கநாதா் மற்றும் திருமங்கை ஆழ்வாா் ஆகியோா் அதிகாலை தேருக்கு எழுந்தருளினா். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், கோயில் நிா்வாக அதிகாரி குணசேகரன் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா்.

பின்னா் நான்கு வீதிகள் வழியாக மதியம் தோ் கோயிலை அடைந்தது. இதில் கோயில் தக்காா் மதியழகன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ரகு, ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தாகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT