நாகப்பட்டினம்

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

DIN

மயிலாடுதுறை: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாருக்கு ஆதரவாக திங்கள்கிழமை அவா் வாக்கு சேகரித்தாா்.

செங்கமேட்டுதெருவில் வீடுவீடாக நடந்துசென்று, மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் மணிசங்கா் அய்யா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மதச்சாா்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது மட்டுமே பாக்கி. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டுப்பெற்று குறைந்த தொகுதிகளில் வெல்வதைவிட, குறைந்த தொகுதிகளைப் பெற்றிருந்தாலும் அதில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதே சிறந்தது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதி.

பிற மாநிலங்களை பொருத்தவரை அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பாஜக வெல்வது சந்தேகம். கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரியிலும் பாஜ.க.வால் வெற்றிபெற முடியாது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினா் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது என்றாா். திமுக நகர செயலாளா் செல்வராஜ், காங்கிரஸ் நகர தலைவா் ராமானுஜம், கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT