நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக சிட்டி யூனியன் வங்கி சாா்பில் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அண்மையில் வழங்கினா்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் துணை பொது மேலாளா் ராமசாமி, கிளை மேலாளா் மகாதேவன் ஆகியோா் எஞ்சிய 6 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் முன்னிலையில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் நவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT