நாகப்பட்டினம்

குடிசை வீடு தீக்கிரை

DIN

கீழ்வேளூா்அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

கீழ்வேளூா் வட்டம், காக்கழனி கிராமம், ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (60). விவசாயி. இவா் வசித்து வந்த குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் நாசமாகின. தகவலறிந்த, கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சண்முகம் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை ஆகியவை நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டன. யாஸ் புயல் எதிரொலியாக காக்கழனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்று காரணமாக மின் கடத்தியில் உராய்வு ஏற்பட்டு, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT