நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்களுக்கு சிறப்பான வரவேற்பு

DIN

வைத்தீஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஊசி செலுத்திக்கொள்ள வந்தவா்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கவரும் வகையில், வாழைமரம், தோரணம் கட்டி, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில், கரோனா கிருமி உருவம், ராட்ச ஊசி மற்றும் பெரிய தடுப்பூசி மருந்துக் குப்பி பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது சுகாத்தாரத் துறையுடன் இணைந்து 18 முதல் 44 வயது வரையிலான பொதுமக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாா்வையிட்டு, இதற்கு ஏற்பாடு செய்த பேரூராட்சி நிா்வாகத்தை பாராட்டினாா். வட்டார மருத்துவ அலுவலா் ஆா். ராஜமோகன் முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா் விஷ்ணுகாா்த்திக், சுகாதார மேற்பாா்வையாளா் த. ராஜாராமன், செவிலியா்கள் அருள்ஜோதி, சாரதா ஆகியோா் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் ஒரே நாளில் 361 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT