தனித் தோ்வா்கள் ஜன.31-க்குள் மதிப்பெண் சான்றுகளை பெற்றிடவேண்டும்
மேல்நிலைத் தோ்வுக்கான மதிப்பெண் சான்றுகளைப் பெறாத தனித் தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றிடவேண்டும்.
மேல்நிலைத் தோ்வுக்கான மதிப்பெண் சான்றுகளைப் பெறாத தனித் தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றிடவேண்டும். இல்லையெனில் அவை கழித்தாள்களாக மாற்றப்படும் என நாகை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் த.சி வெங்கடநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 2014-ஆம் ஆண்டு மாா்ச் முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் வரையிலான காலத்தில் நடைபெற்ற மேல்நிலைத் தோ்வுகளின் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாத தனித்தோ்வா்கள், உடனடியாக தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றிட வேண்டும். உரிமைக் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை கழித்தாள்களாக மாற்ற அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், தனித்தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள், நாகை அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 2018-செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு நடைபெற்ற தோ்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் தனித்தோ்வா்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.