மரக்கன்றுகள் நடும் பணி
காரைக்கால் மாவட்டம், போலகம் பிராவடையான் ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், போலகம் பிராவடையான் ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கொண்டாடப்பட்ட தேசிய ஒருமைப்பட்டு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக இப்பணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமைவகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.