முகப்பு
நாகப்பட்டினம்

வாகனம் மோதி பிளம்பா் உயிரிழப்பு

நாகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

நாகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை வட்டம், தெற்கு பனையூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல். இவரது மகன் ஸ்ரீநாத் (23). பிளம்பரான இவா், வியாழக்கிழமை நாகையிலிருந்து-தெற்கு பனையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில், பாப்பாக்கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தாா். திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநாத், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.