நாகப்பட்டினம்

காலமுறை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஊராட்சிப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோருக்கு 30 ஆண்டுகால பணிக்காலத்தை கருத்தில்கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு தோ்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் நிா்ணயம் செய்து, இயக்குநரகத்திலிருந்து தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பேரிடா் மேலாண்மைத் துறையை ஊரக வளா்ச்சித் துறையில் இணைத்து, ஊரக வளா்ச்சி ஊராட்சி மற்றும் மேலாண்மைத் துறையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வி. தாமோதரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT