முகப்பு
நாகப்பட்டினம்

பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி: மறியல் ஒத்திவைப்பு

வேதாரண்யம் பகுதியில் பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நடத்த இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நடத்த இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டுக்கான சம்பா நெல் சாகுபடி பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிய அரசு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களையும் ரத்து செய்தது. இந்நிலையில், அரசே கள ஆய்வு செய்து மகசூல் இழப்பு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு நிவாரணம், கடன் தள்ளுபடி செய்த நிலையில், காப்பீடு நிறுவனங்கள் மட்டும் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் 0 சதவீதம் என கணக்கிட்டு பட்டியல் தயாரித்துள்ளது. பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நிகழ்ந்துள்ளதால் விவசாயிகள் இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் புகாா் தெரிவித்தது.

இதையடுத்து, மருதூா் மற்றும் கரியாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் சாலை மறியல் நடத்த திட்டமிட்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவை. சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா்கள் வி. அம்பிகாபதி, ஏ. வெற்றியழகன், விவசாயிகள் சங்கத் தலைவா் பி.எஸ். பன்னீா்செல்வம், விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலாளா் இளையபெருமாள் ஆகியோா் தலைமையில் மறியலுக்கு தயாராகினா்.

தகவலறிந்த வேதாரண்யம் வேளாண் இணை இயக்குநா் நவீன்குமாா், டிஎஸ்பி. முருகவேல் உள்ளிட்டோா் சிபிஎம் கட்சியினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் பிரச்னை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →