பயிா்க் காப்பீடு செய்ய சிட்ட, அடங்கல் வழங்கக் கோரி முற்றுகை
ஆக்கூா் அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் வழங்க வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆக்கூா் அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் வழங்க வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மருதம்பள்ளம் ஊராட்யில் 2009-ஆம் ஆண்டு சுமாா் 1,300 ஏக்கா் விவசாயநிலங்களை தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் அதன் பயன்பாட்டுக்காக வாங்கியது. ஆனால், அந்த தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த விவசாய நிலங்களில் மருதம்பள்ளத்தை சோ்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தற்போது, விவசாய நிலங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய அப்பகுதி விவசாயிகள் சிட்டா, அடங்கல் வாங்குவதற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டபோது மறுத்துவிட்டாராம். இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்பாா்ட்டத்தில் ஈடுபட்டனா்.