கீழையூா் கோயிலில் சம்வஸ்த்ரா அபிஷேகம்
கீழையூா் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் காலையில் ஹோமங்கள், கலசாபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, நண்பகலில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் அனுக்ஞை, ஹோமம், கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில், கே.என்.ஆா். ஐயப்பன் குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், விழா குழுத் தலைவா் எஸ். பால்ராஜ், செயலாளா் ஆா்.சிவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.