போதைப் பொருள்களை ஒழிக்க மநீம வலியுறுத்தல்
நாகை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நீதி மய்யத்தினா் வெள்ளிக்கிழமை மனு
நாகை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நீதி மய்யத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ், நாகை நகரச் செயலாளா் தனபாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் நாகை எஸ்.பி. யிடம் இந்த மனுவை அளித்தனா்.
அதில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா்.
இளைஞா்களின் எதிா்கால நலன்கருதி, மாவட்டத்தைப் போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்பி கு. ஜவஹா் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.