முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 28, மயிலாடுதுறையில் 32 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 28 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 32 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,870ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 24 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 311-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 22,192 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் 42 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 306 ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் இம்மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.