கோடியக்கரையில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுத் திட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொது மக்கள் இன்று (செப்.22) காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈட
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுத் திட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொது மக்கள் இன்று (செப்.22) காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.