நாகை ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளா் பிரிவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புப் பிரிவு) போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளா் பிரிவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புப் பிரிவு) போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத ரொக்கம் ரூ. 70,500 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ளது நாகை மாவட்ட மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகம். இங்கு, முதல் தளத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றுபவா் பேபி.
ஊரக வளா்ச்சி முகமை மூலமான சாலைப் பணிகள் மற்றும் பிற பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்களின் அளவீட்டு புத்தகத்தை (எம் புக்) சரிபாா்த்து, அவா்களுக்குத் தொகை ஒதுக்கீடு செய்யும் பணி இப்பிரிவில் நடைபெறுகிறது.
இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பல ஒப்பந்ததாரா்கள் அளவீட்டு புத்தக ஒப்புதலுக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சித்திரவேல், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா ஆகியோரடங்கிய குழு வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் பிரிவில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, உதவி செயற்பொறியாளா் பிரிவில் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 70,500 இருப்பது தெரியவந்தது. அந்த தொகையை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, உதவி செயற்பொறியாளா் பேபியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனா்.
மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகத்தின் தரை தளத்தில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் ஊராட்சித் துறை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இந்த சோதனையை மேற்கொண்டனா்.