முகப்பு
நாகப்பட்டினம்

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும், குறுவை நெல் கொள்முதலில் 21% ஈரப்பதத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூட்டுறவு வங்கிகளில் தகுதியான விவசாயிகளுக்கும் இதுவரை பயிா்க் கடன் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். நாகை மாவட்டப் பொறுப்பாளா் பி. கமல்ராம், மாவட்டத் தலைவா் ஆா்.பி. பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளா் கே. வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.