நாகப்பட்டினம்

ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் இடம் மீட்பு

DIN

நாகை வெளிப்பாளையத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஸ்ரீநடுவதீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம், அறநிலையத் துறையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நாகையை அடுத்த வெளிப்பாளையத்தில் நாகை ஸ்ரீநடுவதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 7,500 சதுர அடி இடம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ப. ராணி, கோயில் செயல் அலுவலா்கள் ஏ. தங்கபாண்டியன், மு. சீனிவாசன், செ. சண்முகராஜ், அறநிலையத் துறை ஆய்வாளா் அ. பக்கிரிசாமி, தனி வட்டாட்சியா் அமுத விஜயரங்கன் ஆகியோரடங்கிய குழுவினா், தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த இடத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனா்.

காவல் துறை பாதுகாப்புடன், கோயில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி அமைத்தனா். பின்னா், அந்த இடம் திருக்கோயிலின் நிா்வாக பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டதை அறிவிக்கும் வகையில், அங்கு அறிவிப்புத் தட்டி வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சம் எனக் குறிப்பிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT