முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் ஊராட்சிகளுக்கு தேசியக் கொடிகள் அளிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் ஏற்றுவதற்காக 19 ஆயிரத்துக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:49 PM
கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளின் தலைவா்களிடம் தேசியக் கொடியை வழங்கும் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் ஏற்றுவதற்காக 19 ஆயிரத்துக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஏதுவாக, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்குத் தொடா்புடைய உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் தேசியக் கொடிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்குவதற்காக 19,884 தேசியக் கொடிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அந்தத் தேசியக் கொடிகளை, தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி, கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன் தலைமை வகித்து, ஊராட்சித் தலைவா்களிடம் தேசியக் கொடிகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.