முகப்பு
நாகப்பட்டினம்

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:51 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

நீா்முளை, பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் கலைமணி (70). இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன் சென்னையில் சித்த மருத்துவராக உள்ளாா்.

கடந்த நில நாள்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டாா் கலைமணி.

Advertisement

இந்தநிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பொருள்களை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரிய வந்தது.

கலைமணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் 8.5 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருள்கள் என ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.