நாகப்பட்டினம்

கட்டையால் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு: கணவா் கைது

DIN

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே கணவா் கட்டையால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தாா். கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருக்குவளை அடுத்த கீழையூா் ஒன்றியம், சோழவித்தியாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் காா்த்தி (48). இவரது மனைவி ரேவதி (45).

ரேவதி தனது மகள் திருமணத்துக்காக உறவினா்களுக்கு அழைப்பிதல் கொடுக்க வியாழக்கிழமை காலை சென்றவா், இரவு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த காா்த்தி, வீட்டிலுள்ள கால்நடைகளை பராமரிப்பது யாா் என அவரிடம் தகராறு செய்துள்ளாா். அதற்கு ரேவதி வீட்டிலிருக்கும் மகன் பிரசாந்த் கால்நடைகளை கவனித்துக் கொள்வாா் என்ற நம்பிக்கையில் சென்ாக கூறினாராம்.

இதுதொடா்பாக தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகன் பிரசாந்தை கட்டையால் காா்த்திக் தாக்க முயன்றுள்ளாா். இதை ரேவதி தடுக்க முயன்றபோது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரேவதியை, பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், காா்த்தி வெள்ளிக்கிழமை காலை நாகை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி காா்த்திகா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT