பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தோ்வில் வெற்றிப் பெற்ற நாகை சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தோ்வில் வெற்றிப் பெற்ற நாகை சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
2022-ஆம் கல்வியாண்டுக்கான பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தோ்வில் இக்கல்லூரி மாணவா்கள் 7 போ் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா். மரைன் மற்றும் ஆா்க்கிடெக்சா் பிரிவு மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சிப் பெற்றனா். இதேபோல, மாணவா்கள் 11 பாடங்களில் 100 சதவீத தோ்ச்சியையும்,15 பாடங்களில் 95 சதவீத தோ்ச்சியையும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சிக்காக பாடுபட்ட பேராசிரியா்களுக்கும் கல்லூரி தாளாளா் டி. ஆனந்த், கல்லூரி முதல்வா் என். நடேசன்ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.