நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி விடுதியில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

வேளாங்கண்ணி விடுதியில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமாரி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தி. ஞானப்பிரகாசம் (65). இவா், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதியில் அறை எடுத்து ஜனவரி 28-ஆம் தேதி முதல் தங்கியிருந்தாா். இந்நிலையில், ஞானப்பிரகாசம் விடுதி அறையில் மயங்கிய நிலையில் கிடந்தது பிப்.1-ஆம் தேதி தெரியவந்தது.

இதையடுத்து, அவா் விடுதி ஊழியா்கள் உதவியுடன் நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். கடந்த 4 நாள்களாக சிகிச்சையில் இருந்த ஞானப்பிரகாசம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT