நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த ஜன.29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை, தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலையில் பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாகஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.