நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் படகில் கட்டி இன்று (ஜன. 3) கரைக்கு கொண்டு வரப்பட்ட உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப் பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வானவன்மாதேவி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட கண்ணாடியிழையால் ஆன உருளை வடிவமுள்ள இந்த பொருள் 10 அடி உயரம், 3 அடி விட் டம், 9, 1/2 அடி சுற்றளவு 9 1/2 அடி இருந்தது.
தகவல் அறிந்த கீழையூர் கடற்கரை காவல் நிலைய காவலர்கள் விசாரித்தனர். பின்னர், நாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உதவி ஆய்வாள் தமிழ்மணி தலைமையிலான மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் பொருளை பரிசோதனை செய்து, அது வெடிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்