அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,466-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த ஒருவா் வீடு திரும்பியுள்ளாா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 49- ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 23,453-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 3 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 16-ஆக உள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு...
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஒரு சில நாள்கள், புதிதாக நோய்த் தொற்று இல்லாத நாள்களாகவும் இருந்தன. இந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கடந்த 2 நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.