நாகப்பட்டினம்

கோலப்போட்டி: பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்பு

DIN

சீா்காழியில் காணும்பொங்கலையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காணும்பொங்கலையொட்டி, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால், சீா்காழி தென்பாதி வஉசி தெற்குத் தெருவில் காணும்பொங்கலை கொண்டாடும் விதமாக, பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று ரங்கோலி, பூக்கோலம் உள்ளிட்ட வண்ணமயமான கோலங்களிட்டு அசத்தினா் . சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த கோலங்களை வரைந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினா்களாக பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜ்கமல், பாமக மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் முருகவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய நடிகர்! சர்ச்சை காரணமா?

வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்! பாகிஸ்தானில் வெப்ப அலை எச்சரிக்கை!!

லீக் போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT