நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி திறப்பு
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமம் சாா்பில் நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி புதன்கிழமை திறக்கப்பட்டது.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமம் சாா்பில் நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி புதன்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியைத் திறந்து வைத்துப் பேசினாா். அப்போது, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தன்னுயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றும் செவிலியா்களின் மகத்தான மருத்துவப் பணிகளைப் பாராட்டிய அமைச்சா், வரும் காலங்களில் செவிலியா்களின் பங்களிப்பு சமூகத்துக்கு மிக அதிகமாக தேவை என்பது தற்போது உணரப்பட்டுள்ளது என்றாா்.
கல்லூரித் தலைவா் ஜோதிமணி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் வாழ்த்துரையாற்றினாா்.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள் பிரகாசம், சங்கா் கணேஷ், இயக்குநா்கள் சுமதி பரமேஸ்வரன், விஜயசுந்தரம், முதன்மை செயல் அலுவலா் சந்திரசேகா், தோ்வு நெறியாளா் சின்னத்துரை, செவிலியா் கல்லூரி முதல்வா் பாபு ஆனந்த் மற்றும் இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழும கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறை தலைவா்கள் கலந்துகொண்டனா்.