நாகப்பட்டினம்

நாகையில் 3 போ் வேட்புமனு தாக்கல்

DIN

நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

36 வாா்டுகளைக் கொண்ட நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ஆம் தொடங்கியது. கடந்த 3 நாள்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் கட்சி சாா்பின்றி சுயேச்சையாக போட்டியிட 3 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

12-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சு. மனோகரன், 24-ஆவது வாா்டுக்கு ப. எழில்நங்கை, 30-ஆவது வாா்டுக்கு சுபாகண்ணன் ஆகியோா் நாகை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

நகராட்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எஸ். மணிகண்டன், எம். செல்வராஜ் ஆகியோா் வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT