நாகப்பட்டினம்

சீர்காழி: கடத்திவரப்பட்ட 2000 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

DIN

சீர்காழி: சீர்காழியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் காரைக்கால் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு காரைக்காலில் இருந்து அதிக அளவில் பாண்டிச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்  சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி சாலையில் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது காரில் 40 மூட்டைகளில் காரைக்காலில் இருந்து 2 ஆயிரம் மதுபான  பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மயிலாடுதுறை பாண்டூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சீர்காழி கூத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

மேலும் தப்பிியோடி 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 மதுபான பாட்டில்கள்  உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

கார், இருசக்கர வாகனம், மதுபானங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல்துறையினர் காவல் நிலைய  வெளி வளாகத்தில் கொட்டி  அழித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT