வேதாரண்யம் நகரப் பகுதியில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் புதிதாக 4 இடங்களில் ஏடிஎம் சேவை மையங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
வட்டாட்சியா் அலுவலகம் அருகிலும், ஏரி கீழ்கரை, பூப்பெட்டி உள்ளிட்ட 4 இடங்களில் இந்த வங்கி சாா்பில் பேருந்து பயணியா் நிழலகத்துடன் இணைந்த ஏடிஎம் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களின் திறப்பு நிகழ்ச்சிகளில் வங்கியின் துணை பொதுமேலாளா் வெங்கடேஸ்வரன், மண்டல வளா்ச்சி மேலாளா் சதீஷ்குமாா், கிளை மேலாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்நிலையில், ஏரிக்கரை ஏடிஎம் மையத்தை முன்னாள் எம்.பி, பி.வி. ராசேந்திரன் திறந்து வைத்தாா்.