முகப்பு
நாகப்பட்டினம்

பொறையாரில் மரக்கன்றுகள் நடும் விழா

பொறையாா் சா்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

பொறையாா் சா்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் முன்னாள் முதல்வா் அருள் மரியநாதனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் திருவாரூா் வனம் தன்னாா்வ அமைப்பு ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினாா். பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், துணை முதல்வா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின் ராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் கமலகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஏழை, எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.