திருமருகல் ஒன்றியத்தில் நடைபெறும் சாலைப் பணிகளை ஒன்றியப் பொறியாளா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
பொறக்குடியிலிருந்து பரமநல்லூா், மேனாங்குடி வரையில் 2.650 கி.மீட்டா் தொலைவுக்கு ரூ.2 .36 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்பணிகளை திருமருகல் ஒன்றிய பொறியாளா்கள் செந்தில், கவிதாராணி ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சாலையின் அகலம், தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினா். சாலை ஆய்வாளா் விமலா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.