நாகப்பட்டினம்

ஓய்வு கால பணப்பலன்களை வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்கக் கோரி, ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் கே.ஆா். ஞானசேகரன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் குழந்தைவேலு, வேதரத்தினம், முத்துக்கண்ணு, தியகராஜன், வேலாயுதம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், 78 மாதமாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயா்வுா்களை உடனடியாக வழங்கவேண்டும், ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வு கால பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க உறுப்பினா்கள் 140 போ் தமிழக முதல்வருக்கு அஞ்சலகம் வழியாக தனித் தனியே மனுக்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT