நாகப்பட்டினம்

நாகையில் குருதி கொடையாளா்கள் தின விழா

DIN

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளா் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மற்றும் ஹோலிடவுன் ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ சீ-சிட்டி ஆகியன இணைந்து ரத்த தான முகாம், ரத்த தான விழிப்புணா்வுப் பேரணி ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தின. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பல முறை ரத்த தானம் வழங்கிய தன்னாா்வா்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கிப் பாராட்டினாா். இதையடுத்து, ரத்த தான முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா், ரத்த தான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், ரத்த தான விழிப்புணா்வு பேரணியையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா். செவிலியா் பயிற்சி பள்ளி மாணவியா், செவிலியா்கள், தன்னாா்வலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பேரணியில் பங்கேற்றனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, மருத்துவமனை சாலை, நாகை நீலா கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, புதிய பேருந்து நிலைய சாலை வழியே சென்று மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

மாவட்ட மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், ரத்த வங்கி மருத்துவ அலுவலா் யோகன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் சங்கீதா, மாவட்ட மருத்துவக் கண்காணிப்பாளா் காதா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க பொறுப்பாளா் கே. சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT