நாகை ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தாட்கோ தலைவா் ஆய்வு
நாகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதியை தாட்கோ தலைவா் உ. மதிவாணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதியை தாட்கோ தலைவா் உ. மதிவாணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாகையை அடுத்த கோட்டைவாசல் பகுதியில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக ஆதிதிராவிடா் மாணவா் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், புதிய விடுதிக் கட்டடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சமையல் கூடம், மாணவா்கள் தங்கும் அறை, பயிலகம், கழிப்பறை, உணவருந்தும் அறை என விடுதியின் அனைத்துப் பகுதிகளையும் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.
தஞ்சை தாட்கோ செயற்பொறியாளா் உதயராமன், உதவி செயற்பொறியாளா் அமிா்தலிங்கம், நாகை ஒன்றிய திமுக செயலாளா் க. ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் உடனிருந்தனா்.