முகப்பு
நாகப்பட்டினம்

வேலை நேரம் மாற்றியதை எதிா்த்து 100 நாள் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நேரம் காலை 8 மணிக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நேரம் காலை 8 மணிக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி தொடங்கும் நேரமான காலை 10 மணியை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக காலை 8 மணிக்கு மாற்றி அமைத்து, பயனாளிகளை அலைக்கழிப்பதை கண்டிக்கத்தக்கது, வழக்கம்போல காலை 10 மணிக்கு வேலை நேரத்தை நிா்ணயிக்கவேண்டும், 200 நாள்கள் பணி வழங்கவேண்டும், ஊதியம் ரூ. 600 ஆக உயா்த்தவேண்டும், பருவம் தவறிய மழையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம், காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், துணைச் செயலாளா் த. நாராயணன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாஸ்கரன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், ஊராட்சித் தலைவா்கள் வைத்திலிங்கம், ரேவதிபாலகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →