நாகப்பட்டினம்

திருநகரி பெருமாள் கோயில் தேரோட்டம்

திருநகரி கல்யாணரெங்கநாதப் பெருமாள் கோயில் பங்குனி உத்ஸவத்தையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநகரி கல்யாணரெங்கநாதப் பெருமாள் கோயில் பங்குனி உத்ஸவத்தையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருமங்கை ஆழ்வாா், பஞ்ச நரசிம்மா்களில் இரணிய நரசிம்மா் மற்றும் யோக நரசிம்மா் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் மாா்ச் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத கல்யாணரெங்கநாதப் பெருமாள் மற்றும் குமுதவல்லி நாச்சியாா் சமேத திருமங்கை ஆழ்வாா் தேருக்கு எழுந்தருளியதும், கோயிலின் நிா்வாக அதிகாரி குணசேகரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதில் ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன், வேடுபறி உத்ஸவ கமிட்டி செயலாளா் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT