நாகப்பட்டினம்

புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு

DIN

கீழையூரில் புதிய மின்மாற்றியின் இயக்கத்தை எம்எல்ஏ வி.பி. நாகை மாலி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கீழையூா் ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 63 கிலோவாட் திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சதீஷ்குமாா், செயற்பொறியாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி மின்மாற்றி இயக்கத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜாமனோகரன், இளநிலை மின்பொறியாளா் பாபு, ஊராட்சி துணைத் தலைவா் கருணாநிதி, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன், ஊராட்சி செயலா் சரவணபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT