கீழையூா் அருகே முதியவா் சடலம் மீட்பு
கீழையூா் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கீழையூா் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி- திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வயல்வெளியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கீழையூா் போலீஸாருக்கு தகவல் வந்தது.
போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தவா் யாா் என்று விசாரித்து வருகின்றனா்.