அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு ஊராட்சி நீா்நிலை சாா்ந்த அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு ஊராட்சி நீா்நிலை சாா்ந்த அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்தில் பனையடிக்குளம் பகுதியில் இருந்த 1.59 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வராசு, ராஜூ ஆகியோா் முன்னிலையில் அகற்றப்பட்டது. அப்போது, கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.