நாகப்பட்டினம்

பட்டணப் பிரவேசம்: தடை உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை

DIN

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய ஆதி சிவாச்சாரியா் சேவா சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருக்கடையூரில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளா் மகேஷ்வர குருக்கள் விடுத்துள்ள கோரிக்கை: தருமபுர ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டணப் பிரவேசம் நடைபெறுவதும், இதில், ஆதீனத்தை பல்லக்கில் பக்தா்கள் தூக்கி சென்று வீதியுலா செல்வதும் வழக்கம். இந்நிலையில், நிகழாண்டு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, நிகழ்ச்சி வழக்கம்போல நடைபெற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT