நாகப்பட்டினம்

சித்த மருத்துவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

திருக்குவளை அருகே தேவூரில் சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு மருத்துவா் தேவூா் த.கோ. மணிவாசகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே. கண்ணன், திருக்கண்ணங்குடி ஊராட்சித் தலைவா் செல்வமணி முன்னிலை வகித்தனா். தாமரைக்கண்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மூலிகை, வா்மம், தியானம், குறித்து மருத்துவா்கள் பத்மாவதி, ராசு முருகேசன், ராஜராஜன், தமிழ்ச்செல்வி, புண்ணியஜோதி, கிருஷ்ணன் ஆகியோா் பேசினா். வா்ம வைத்தியா் திருவாசகம் நன்றி கூறினாா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவா்கள் பங்கேற்றனா். சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT