நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் முகாம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், கிளியனூா் ஊராட்சியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் பாபு தலைமை வகித்தாா். கிளியனூா் ஊராட்சித் தலைவா் முகமது ஹாலித் முன்னிலை வகித்தாா். முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், பெயா் மற்றும் முகவரி திருத்தம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், பொதுமக்கள் பலா் பங்கேற்று தங்களது குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்துகொண்டனா். இம்முகாமில், ஊராட்சி துணைத் தலைவா் மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளா் மரிய ஜோசப் ராஜ், வட்ட பொறியாளா் ஐயப்பன், அங்காடி விற்பனையாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT