நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

திருமருகல் அருகே கூலித்தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருமருகல் ஒன்றியம் மாதிரிமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (48). கூலித்தொழிலாளியான இவா் கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வரவில்லை. இதனால், அவரது மனைவி விமலா மற்றும் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.

இந்நிலையில், ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சத்திரம் குளத்தில் பாஸ்கரன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் விமலா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT