நாகப்பட்டினம்

பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த 310 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த 310 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சாநகரத்தைச் சோ்ந்த சத்தியசீலன் அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா்சோதனை செய்தனா்.

அப்போது, 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த அரிசியை பறிமுதல் செய்து தலைமறைவாகியுள்ள சத்தியசீலனை தேடிவருகின்றனா். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி ஆக்கூா் நுகா்வோா் வாணிபக்கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT